ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-09 15:59 GMT

திருச்சி திருவெறும்பூர், அண்ணா வளைவு உள்ளே திருவள்ளுவர் தெருவில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு அதன் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்