ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மேற்கு தெருவில் சீரற்ற மின்சார வினியோகம் இருந்தது. இதனை சரிசெய்யும் வகையில் வடக்கு தெரு பள்ளிவாசல் சுற்றுச்சுவர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்க கம்பங்கள் நடப்பட்டன.. தற்போது இந்த பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைந்து முடிக்க வேண்டும்.