விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே மண்குண்டாம்பட்டி பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற நிலையில் இந்த கம்பம் உள்ளதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.