விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றிலிருந்து கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையில் மின்கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை மாற்றக்கோரி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே மழைக்காலத்திற்கு முன்பு மின்கம்பங்களை மாற்றி அமைக்க விருதுநகர் மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.