திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை ஊராட்சி பழங்காவேரி குடியிருப்பு பகுதியில் உயர்அழுத்த மின் கம்பிகள் செல்லும் மின் கம்பமானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.