கூடுதலை போலீசாரை நியமிக்க வேண்டும்

Update: 2024-06-09 14:22 GMT

ஆம்பூரில் நான்கு வழி சாலை மற்றும் மேம்பாலப் பணிகளால் சென்னை வழித்தடம் மற்றும் பெங்களூரு சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. வாகன நெரிசலால் ஆம்புலன்சுகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றன. போக்குவரத்துப் போலீசார் சிரமம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், போதிய எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை. கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- உதயகுமார், ஆம்பூர். 

மேலும் செய்திகள்