Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Nov 2022 10:33 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#22408

குண்டும், குழியுமான சாலை

சாலை

குன்னத்தூர் அருகே கருமஞ்செறை ஊராட்சி காட்டுவளவு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இத்தகைய சாலை பல வருடங்களாக புதுப்பிக்காமல் இருப்பதால் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இத்தகைய சாலையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும்என கோரிக்கை எழுந்துள்ளது.----------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:31 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#22404

குப்பை தொட்டி வைக்க வேண்டும்

குப்பை

திருப்பூர் காலேஜ் ரோட்டில் இருந்து மாஸ்கோ நகர் செல்லும் வழியில் மல்லிகை நகர் உள்ளது. இந்த பகுதியில் குப்பை தொட்டி இல்லாத காரணத்தால் ரோட்டில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே இந்த குப்பை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்தப் பகுதியில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 10:25 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#22397

சாலையோர மரங்களை அகற்ற வேண்டும்

மற்றவை

குன்னத்தூர் அருகே 16 வேலம்பாளையத்தில் இருந்து பாப்பா வலசு செல்லும் வழியில் 2 பனை மரங்கள் நடுரோட்டிலேயே உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் பனை மரங்களை அப்புறப்படுத்தி கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 9:58 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#22127

கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் பைபாஸ் ரோட்டிலிருந்து ஆட்டையாம்பாளையம் வரை 3 கி.மீ தூரத்திற்கு கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். எனவே சாலையை சீரமைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 9:56 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#22125

மரக்கிளைகளுக்குள் மறைந்துள்ள பெயர் பலகை

மற்றவை

காங்கயம், தாராபுரம் சாலையில் இருந்து கம்பளியம்பட்டி செல்லும் சாலையில் ஆறுதொழுவு பகுதி அருகே சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஊர் பெயர் பலகையை அருகில் இருக்கும் மரக்கிளைகளால் மூடப்பட்டு ஊர் பெயரே தெரியாத அளவிற்கு காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் தெரியாமல் குழம்பி வருகின்றனர். எனவே ஊர் பெயர் பலகையை மறைத்து இருக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 9:50 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#22122

பயன்படுத்தப்படாத சுடுகாடு

மற்றவை

குன்னத்தூர் அருகே எடையன்பாளையம் ஊராட்சியில் சுடுகாடு வசதி இல்லாமல் காலிங்கராயன்பாளையம் சாலை ஓரத்தில் பொதுமக்கள் பிணத்தை புதைத்து வந்தனர். இதை அறிந்த ஊராட்சி நிர்வாகம் குன்னத்தூர் தொரவலூர் ரோட்டில் சுடுகாடு மற்றும் காம்பவுண்டு சுவர், ஆழ்குழாய் கிணறுடன் கூடிய சுடுகாடு கட்டி கொடுத்தனர். ஆனால் சுடுகாட்டை பயன்படுத்துவதில்லை. மீண்டும் சாலை ஓரத்திலேயே பிணங்களை புதைத்து வருகிறார்கள். எனவே சுடுகாட்டுக்குள் பிணத்தை புதைக்க நடடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 9:47 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#22121

தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு

தண்ணீர்

வெள்ளகோவிலில் வருட கணக்கில் தேங்கி நிற்கும் மழைநீர் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம கமிட்டியார் தோட்டத்துகாடு, தீயணைப்பு, கீழபுரம் வீரக்குமாரசாமி கோவில் வெளி மைதானம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து விட்டது. வீரகுமாரவலசு அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 12:22 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#21472

இடிந்து விழும் நிலையில் பள்ளி

இடிந்து விழும் நிலையில் பள்ளிமற்றவை

இடிந்து விழும் நிலையில் பள்ளி நல்லூர் மண்டலம் மணியக்காரம்பாளையம் 46-வது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளி காஞ்சிபுரம் பள்ளி கட்டிடத்தின் அவல நிலை சுமார் 500 குழந்தைகள் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. தலைமை ஆசிரியரின் அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.பள்ளி அறைகளும் மேற்கூரை ஆங்காங்கு உடைபட்டு இருக்கிறது. ஆகவே குழந்தைகள், ஆசிரியர்கள் நலன் கருதி கட்டிடத்தை கட்டிடத்தை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ஆர்.அய்யம்பெருமாள்,நல்லூர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 9:58 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#21188

பகலில் ஒளிரும் மின்விளக்குகள்

மின்சாரம்

திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் ெபாதுமக்கள் சாலையில் அச்சமின்றி செல்ல முடிகிறது. ஆனால் திருப்பூர் எம்‌.ஜி.ஆர்.சிலை அருகே பகல் முழுவதும் மின் விளக்கு எரிகிறது. எனவே இரவில் மட்டும் மின் விளக்கு எரியவில்லை. எனவே உரிய நேரத்தில் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 10:21 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#20962

நடுரோட்டில் தேங்கிநிற்கும் மழைநீர்

தண்ணீர்

அவினாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் ரோட்டின் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அவினாசி இஸ்மாயில் வீதியில் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் ரோட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அவ்வழியே வரும் வாகனங்களால் வாரி இறைக்கப்படும் மழைநீர் ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது சேரும் சக தியுமாக விழுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் பள்ளமான பகுதியை மண்போட்டு சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 10:19 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#20961

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

மற்றவை

பல்லடம் சுற்று வட்டாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அங்காங்கே கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. புற்களை மாடுகள் மேயும்போது பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன. இதனால் மாடுகள் உயிரை விடுகின்றன. எனவே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Nov 2022 10:17 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#20960

ரோட்டில் சுற்றித் திரியும் ஆடுகள்

மற்றவை

வெள்ளகோவில் நகர் பகுதியில் சாலைகளில் ஏராளமான ஆடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் இரு சக்கர வாகனங்களுக்குள் வந்து விழுகின்றன. இதனால் வாகனஓட்டிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாக வேண்டி உள்ளது. ஆகையால் நகர் பகுதியில் ஆடுகள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick