Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 April 2025 11:38 AM GMT
Mr.V.Ramachandran
#55257

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

கோவை ரத்தினபுரி சங்கனூர் சாலையில் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் சில தெருவிளக்குகள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் இரவில் அவை ஒளிருவது இல்லை. இதன் காரணமாக அந்த தெருவிளக்குகள் உள்ள இடங்கள் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு பழுதாகி உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 11:37 AM GMT
Mr.V.Ramachandran
#55256

போக்குவரத்துக்கு இடையூறு

சாலை

கோவை சரவணம்பட்டியில் இருந்து விசுவாசபுரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வந்ததால் சாலையும் சேதம் அடைந்தது. அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்க பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்து உள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் குடிநீர் குழாயை சீரமைக்கவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 11:37 AM GMT
Mr.V.Ramachandran
#55255

கடும் துர்நாற்றம்

கழிவுநீர்

கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலை கக்கன் நகர் 1-வது வீதி உழவர் சந்தை அருகே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது. அத்துடன் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 11:14 AM GMT
Mr.V.Ramachandran
#55253

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

கோவை ரத்தினபுரி சங்கனூர் சாலையில் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் சில தெருவிளக்குகள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் இரவில் அவை ஒளிருவது இல்லை. இதன் காரணமாக அந்த தெருவிளக்குகள் உள்ள இடங்கள் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு பழுதாகி உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 April 2025 11:06 AM GMT
Mr.V.Ramachandran
#55252

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் அருகே மேங்கோரேஞ்சு பகுதியில் இருந்து ஏலமன்னா பகுதி வரை சாலை செல்கிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 12:07 PM GMT
Mr.V.Ramachandran
#55065

அடிக்கடி மின்தடை

மின்சாரம்

ஆனைமலை அருகே நெல்லுகுத்திப்பாறை ரோடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சீராக மின்வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 11:32 AM GMT
Mr.V.Ramachandran
#55052

தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நுழைவுவாயில் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இங்கு குப்பைகள், மண் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 10:11 AM GMT
Mr.V.Ramachandran
#55048

குண்டும், குழியுமான சாலைகள்

சாலை

சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளாலும், மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருப்பதாலும் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் அந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 10:10 AM GMT
Mr.V.Ramachandran
#55047

ஆறாக ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு கணக்குபிள்ளை தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறி தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 12:23 PM GMT
Mr.V.Ramachandran
#54891

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை புலியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 12:22 PM GMT
Mr.V.Ramachandran
#54889

பழுதடைந்த நிழற்குடை

மற்றவை

பந்தலூர் அருகே அம்பலமூலாவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக அங்கு நிழற்குடை கட்டப்பட்டு உள்ளது. ஆனால் நிழற்குடை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் அச்சப்படுகிறார்கள். எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில்தான் அந்த நிழற்குடை உள்ளது. எனவே அந்த நிழற்குடையை உடனடியாக சீரமைக்க கொடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 12:06 PM GMT
Mr.V.Ramachandran
#54885

கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

சிங்காநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கமலா குட்டை வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளும் நிறைந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் வழிந்ேதாட முடியாமல் தேங்கி கிடக்கிறது. அத்துடன் அதனருகில் சமூக விேரதிகள் அமர்ந்து இரவில் மது குடித்து வருவதால் அந்த வழியாக பெண்கள் பாதுகாப்பாக சென்று வர முடிவது இல்லை. எனவே அங்கு அமர்ந்து மது குடிப்பதை தடுக்கவும், கால்வாயை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick