Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 May 2025 11:00 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#55759

வண்டல் மண் வழங்கப்படுமா?

மற்றவை

கோவையில் கொளுத்தும் வெயில் காரணமாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நரசாம்பதி குளம், புதுக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குளம், கோளரம்பதிகுளம் உள்ளிட்டவை வேகமாக வறண்டு வருகின்றன. இதை பயன்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் குளங்களும் ஆழப்படுத்தப்படும். விவசாயிகளும் பயன் பெறுவார்கள். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 11:00 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#55758

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஏலமன்னா அருகே உள்ள பண்ணிக்கொல்லி ஆதிவாசி காலனியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது. ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் பாதசாரிகளும் தவறி விழுந்து வருகின்றனர். எனவே அங்கு புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 10:59 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#55757

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை ராமநாதபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அப்போது அந்த வழியாக வரும் பாதசாரிகளையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் விபத்தில் சிக்கும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 12:44 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#55601

உடைந்து கிடக்கும் கால்வாய்

கழிவுநீர்

பந்தலூர் அருகே உப்பட்டி துணை மின்நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் உடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் உடைந்து கிடக்கும் கால்வாயில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 12:43 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#55600

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பிரிவில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காந்திபுரம், உக்கடம் செல்வதற்கு பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் அங்கு வந்து செல்லும் பயணிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 12:42 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#55599

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சில நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 12:42 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#55598

கிராம மக்கள் அச்சம்

மின்சாரம்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே பதினெட்டுகுன்னு கிராமத்தில் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அந்த தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதனால் அந்த கிராமப்பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு புதிதாக தெருவிளக்குகள் பொருத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 12:41 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#55596

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் நூலகம் அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. அதில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இந்த புதர் செடிகளில் விஷ ஜந்துகள் பதுங்கி வருகின்றன. மழைக்காலத்தில் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் வீடுகளுக்குள் நுழையும் அபாயம் உள்ளது. அத்துடன் கழிவுநீரும் தேங்கி வருவதால், தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 12:41 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#55595

இருள் சூழ்ந்த கழிப்பிடம்

மற்றவை

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு நேரு நகரில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் கழிப்பிடம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த நேரத்தில் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 12:48 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#55448

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன்காவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி இந்த பகுதி உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டமும் காணப்படுகிறது. ஆனால் தெருவிளக்கு வசதி இல்லை. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 12:44 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#55447

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

மதுக்கரை ராணுவ முகாம் எதிரே பாலக்காடு சாலையின் இருபுறமும் வேகத்தடை எதுவும் இல்லை. அந்த வழியாக வரும் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. இதனால் சாலையை பாதுகாப்பாக பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 12:43 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#55446

சேறும், சகதியுமான சாலை

சாலை

கோவை திருச்சி சாலை காமாட்சிபுரம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் குடிநீர் தேங்கி வருகிறது. அத்துடன் சாலை சேறும், சகதியுமாக கிடப்பதோடு சேதம் அடைந்தும் வருகிறது. அதில் இரும்பு தடுப்பு வைத்து உள்ளனர். இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே குழாய் உடைப்பை சரி செய்வதோடு சாைலயையும் சீரமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick