Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Sep 2022 5:23 PM GMT
S.Sivaraja | செஞ்சி
#15827

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

செஞ்சி நான்கு முனை சந்திப்பில் பஸ்கள் நீண்ட நேரமாக நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் திருவண்ணாமலை -சென்னை சாலையில் போக்குவரத்து நொிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 5:14 PM GMT
S.Sivaraja | கடலூர்
#15821

வடிகாலில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி அரைகாசி பீவி தர்கா தெருவில் மழைநீர் வடிந்து செல்ல வடிகால் கட்டப்பட்டுள்ளது. இந்த வடிகாலை முறையாக பராமரிக்காததாலும், தூர்வாராததாலும் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி ஆக வழிவகுக்கிறது. எனவே இந்த மழைநீர் வடிகாலை தூர்வாரி கழிவுநீர் வடிந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 5:13 PM GMT
S.Sivaraja | கடலூர்
#15820

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

பெண்ணாடம் வடக்கு திருக்குள தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இறைச்சி, காய்கறி, பால் உள்ளிட்ட கடைகளும் உள்ளன. இந்த தெருவில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்து செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. நாய்களின் தொல்லையால் சிறுவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். எனவே அந்த தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 5:12 PM GMT
S.Sivaraja | கடலூர்
#15819

தினமும் நூலகம் திறக்கப்படுமா?

தினமும் நூலகம் திறக்கப்படுமா?மற்றவை

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில் நூலகம் உள்ளது. மணிமண்டபம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களே நூலகம் செயல்பட்டது. இதனை போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மட்டுமின்றி பலர் பயனடைந்து வந்தனர். அதன்பிறகு அந்த நூலகத்தை திறப்பதில்லை. கடந்த 16-ந் தேதி எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிக்க மணிமண்டபத்திற்கு வந்தனர். அன்றை தினம் குறிப்பிட்ட 1 மணி நேரம் மட்டுமே நூலகம் திறந்திருந்தது. அதன்பிறகு அதனை மீண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:45 PM GMT
S.Sivaraja | சிதம்பரம்
#6107

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

மற்றவை

சிதம்பரம் தாலுகா ஒரத்தூரில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு எதிரே உள்ள குளத்து புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலத்தில் குளத்தில் போதிய அளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. இதனால் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:37 PM GMT
S.Sivaraja | சங்கராபுரம்
#6097

சேதமான வாய்க்கால் பாலம்

சேதமான வாய்க்கால் பாலம்சாலை

சின்னசேலம் சந்தை பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் சிறய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் இடிந்து விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த பகுதியின் வழியாக செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பாலத்தை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகமும் முன்வரவில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீரும் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, பாலத்தை சீரமைக்க முன்வர வேண்டும்.பொதுமக்கள், சின்னசேலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:34 PM GMT
S.Sivaraja | திருக்கோயிலூர்
#6096

பயணிகள் நிழற்குடை தேவை

மற்றவை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அந்த பகுதியில் பஸ் ஏறி, இறங்கி செல்வதற்கு பயணிகள் நிழற்குடை இல்லாமல் உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். ச.ஹரிஹரன், இருவேல்பட்டு

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:25 PM GMT
S.Sivaraja | வானூர்
#6091

சேதமான சாலை

சேதமான சாலைசாலை

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூரில் இருந்து பிரம்மதேசத்துக்கு செல்லும் வகையில் சாலை உள்ளது. இந்த சாலை தற்போது பெயர்ந்து, போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் இருக்கிறது. மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. ஆகையால் அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:24 PM GMT
S.Sivaraja | நெய்வேலி
#6090

பெட்ரோல் பங்க்கை திறக்க வேண்டும்

மற்றவை

நெய்வேலி 24-வது வட்டத்தில் நெய்வேலி ஆட்டோமொபைல் அசோசியேஷன் சார்பில் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்க் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பங்க் மூலமாக பயன்பெற்று வந்த மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதை போக்க, இந்த பெட்ரோல் பங்க்கை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்ஜெயராமன், நெய்வேலி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:46 AM GMT
S.Sivaraja | கள்ளக்குறிச்சி
#2777

பூட்டிக்கிடக்கும் சமுதாய நலக்கூடம்

மற்றவை

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இருப்பினும் அதனை இதுநாள் வரை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் தற்போது பலத்த சேதமடைந்து வருகிறது. மேலும் ஏழை எளிய மக்கள் அந்த கட்டிடத்தை பயன்படுத்தி தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பூட்டிக்கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை திறக்க வேண்டும்.பொதுமக்கள், தியாகதுருகம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:45 AM GMT
S.Sivaraja | சங்கராபுரம்
#2776

காட்சி பொருளான சுகாதார வளாகம்

காட்சி பொருளான சுகாதார வளாகம்மற்றவை

சங்கராபுரம் அருகே வடகீரனூரில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன பின்பும் அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதனை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க காட்சி பொருளாக இருக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டியது அவசியம்.சிவா, வடகீரனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 11:44 AM GMT
S.Sivaraja | உளுந்தூர்ப்பேட்டை
#2774

குண்டும், குழியுமான சாலை

சாலை

உளுந்தூர்பேட்டை புதுத்தெருவில் இருந்து அதே பகுதியில் மயானம் வரை சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.ராஜேஷ், உளுந்தூர்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick