Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Aug 2022 4:08 PM GMT
Mr.Mohan | சேலம்
#11171

தெருநாய்களால் விபத்து

மற்றவை

சேலம் ரெட்டியூர், அழகாபுரம், மூலக்கரடு செல்லும் வழியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த தெருநாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும். -நந்தகுமார், அழகாபுரம்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:06 PM GMT
Mr.Mohan | சேலம்
#11170

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் சூரமங்கலம் அருகே தர்ம நகர் முதல் தெருவில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மீன்கழிவுகளை அகற்றாமல் ஆங்காங்கே சாக்கடை கால்வாயில் தேங்கி கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மீன்மார்க்கெட்டை சுத்தம் செய்து சாக்கடை கால்வாயில் கழிவுகள் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:05 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#11169

நிழற்கூடம் அமைக்க வேண்டும்

நிழற்கூடம் அமைக்க வேண்டும்போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலம் ரோட்டில் இருந்து திருச்செங்கோடு சாலை வழியாக ஆலம்பாளையம் வரைக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுமார் 20 தூண்கள் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பஸ் நிலைய ரோட்டில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற வேண்டி உள்ளதால் அங்கு போடப்பட்டிருந்த நிழற்கூடம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:04 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#11168

நடவடிக்கை எடுப்பார்களா?

போக்குவரத்து

நாமக்கல்-சேலம் ரோட்டில் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகே இரு சக்கர வகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இந்தநிலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பஸ்கள் வருவது தெரியாமல் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் சாலையை கடக்கும் போதும் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்களா? -உதயகுமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:03 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#11167

சுகாதாரமற்ற கழிப்பிடம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள், நோயாளிகள் பயன்பாட்டுக்காக ஆண்கள் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அந்த கழிப்பிடம் பராமரிப்பில்லாமல் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் கழிப்பிடத்தை பயன்படுத்த முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தை சுத்தம் செய்து தூய்மையாக வைக்க வேண்டும். -பிரபாகரன், குரும்பப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:02 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#11166

மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சூளகிரி-கிருஷ்ணகிரி சாலை, உத்தனப்பள்ளி ரோடு, பஜார் தெரு, கீழ்த்தெரு உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களிலும் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள், சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் தெருநாய்கள் விரட்டுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -எம்.ராஜா, சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:01 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#11165

புதிய சாலை அமைக்க வேண்டும்

சாலை

ஓசூர் அருகே கர்னூரில் இருந்து ஆனேக்கல் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனிராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:00 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#11164

வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசலாமே!

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கொல்லப்பள்ளியில் இருந்து சாலிநாயனப்பள்ளி வரை தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி வேகத்தடைகளுக்கு காலதாமதம் இன்றி வர்ணம் பூசி விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், கொல்லப்பள்ளி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 4:00 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#11163

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம்-தேன்கனிக்கோட்டை செல்லும் மெயின்ரோட்டில் துளசி நகர் பகுதியில் ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. சின்னட்டி, ஏ.புதூர், பெரமண்ட ஏரி, துளசி நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகள் உள்ள பாதையில் சென்று வருகின்றனர். மதுப்பிரியர்கள் சாலையோரம் ஆங்காங்கே நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த பாதையில் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:59 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#11162

கால்வாயில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்

கால்வாயில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் எதிரே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடு்த்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். ஆறுமுகம், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:58 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#11161

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 7-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டிக்கு நீரேற்றும் மின்மோட்டார் பழுதடைந்து காணப்படுகிறது. நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி இதே நிலையில் காணப்படுவதால் அந்த பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்மோட்டாரை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்திபன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 3:57 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#11160

மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதனஅள்ளி பஸ் டெப்போ பகுதியில் உள்ள பென்னாகரம்-தர்மபுரி செல்லும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியாமல் சிலர் அதில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்பார்களா? -திருமலை, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick