Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Nov 2024 5:51 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#51330

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல்- சேந்தமங்கலம் செல்லும் வழியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் இரு புறங்களிலும் இறைச்சி, மீன் கடைகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் மோட்டார் சைக்கிளில், நடந்து செல்வோரை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால் தெருநாய்களால் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளது. -பால்ராஜ், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:50 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#51329

குப்பை கிடங்காக மாறிய பாலம்

குப்பை

சேந்தமங்கலம் காந்திபுரத்தில் இருந்து காரவள்ளிக்கு செல்லும் வழியில் சாமிகாடு கிராமம் உள்ளது. இந்த கிராம பகுதியில் வாய்க்கால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கீழே சமூக விரோதிகள் சிலர் அமர்ந்து மது குடித்து விட்டு காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை வீசி விட்டு செல்கின்றனர். இதனால் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. மேலும் அந்த இடம் குப்பை கிடங்காக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:35 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#51321

விதிமுறைகளை மீறும் சரக்கு வாகனங்கள்

போக்குவரத்து

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இதனால் கடந்த காலங்களில் ஆங்காங்கே தொடர் விபத்துக்கள் ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். எனவே விதிமுறைகளை மீறி ஆட்கள் பாரம் ஏற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபரிநாதன், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:34 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#51320

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

ஏரியூரில் பிரதான கடைவீதியில் நியாய விலைக் கடை மற்றும் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக குப்பை தொட்டிகள் நிரம்பி குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் முகம் சுழித்த படி செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிகண்டன், மலையனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:32 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#51318

கல்லூரி மாணவர்களால் தொடரும் விபத்து

போக்குவரத்து

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஏரியூர்- பென்னாகரம் சாலையில் மோட்டார் சைக்கிள்களில் 3 முதல் 4 பேர் பயணம் செய்கிறார்கள். மேலும் ஆபத்தை அரியாத வகையில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்கின்றனர். அதனால் இந்த பகுதியில் தொடர் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்க வேண்டும். -அய்யப்பன், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:31 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#51317

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி சின்னம்பள்ளியில் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை மருந்தகத்தில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தமிழ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:29 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#51315

புதிய சுகாதார வளாகம் தேவை

மற்றவை

ஊத்தங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சி கல்லூர் கிராமத்தில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இயற்கை உபாதைக்காக திறந்தவெளியை பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதிமக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய சுகாதார வளாகத்தை கட்டி தர வேண்டும். -சாமிநாதன், கல்லூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:28 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#51314

மது பிரியர்களால் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மது வாங்க கூடிய பலரும், பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வளாகம் பகுதியில் அமர்ந்து மது குடிக்கிறார்கள். காலை முதல் இரவு வரையில் பலரும் அந்த இடத்தில் அமர்ந்து மது குடிப்பதால் அந்த சாலை வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் மது பிரியர்கள் பலரும், போதையில் பாட்டில்களை அங்கு உடைத்து செல்கிறார்கள். மேலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனால் அந்த சாலையை இரவு நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:26 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#51313

தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் குரங்குகள்

போக்குவரத்து

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி முன்பாக மேலுமலை உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குகள் அதிக அளவில் வருகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதியில் தாழ்வான சாலையில் வாகனங்கள் அதி வேகமாக வருகின்றன. அந்த நேரம் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் குரங்கள் இருப்பதால், விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சுற்ற கூடிய குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 5:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#51309

வேகத்தடைகள் பராமரிக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகரில் சேலம் சாலை, சப்-ஜெயில் சாலை, பெங்களூரு சாலை, சென்னை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. குறிப்பாக இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலருக்கும் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். ஆகவே இந்த வேகத்தடைகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சின்னத்தம்பி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:51 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#50987

சாக்கடை கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

சேலம் சின்ன திருப்பதியில் உள்ளது ஸ்ரீனிவாச நகர். இந்த பகுதிக்கு சாக்கடை கால்வாய் வசதி என்பதே கிடையாது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சாலைகளிலும், தெருக்களிலும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு சாக்கடை கால்வாய் அமைத்து தரவேண்டும். -சந்திரசேகரன், சின்னதிருப்பதி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 5:50 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#50986

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் மாவட்டம் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் சுகாதார வளாகங்கள், குப்பைகள் கொட்டும் இடங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் மருந்து முறையாக தெளிக்க வேண்டும். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick