Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 May 2025 4:45 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#56385

சாலையில் திடீர் விரிசல்

சாலை

சேந்தமங்கலம்-காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரம் காரவள்ளிக்கு செல்வதற்கு குறுக்கு சாலை காணப்படுகிறது. அந்த சாலை செல்லும் வழியில் வெண்டாங்கி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் தற்போது திடீர் ‘பிளவு' ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த பிளவு பெரிதாவதற்குள் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாஸ், வெண்டாங்கி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:31 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56382

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

அரூர் பெரியார் நகரில் சண்முகம் ஆசிரியர் தெரு உள்ளது. இந்த தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் தற்போது வரை இந்த பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் மழை நிரம்பி உள்ளது. மேலும் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கிடப்பில் கிடக்கும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:31 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#56381

மயானத்திற்கு சாலை வசதி

சாலை

தர்மபுரி செட்டிகரை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு இக்கிராமத்தின் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அந்த மயானத்திற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதனால் ஏரி கரையின் ஓரத்திலும், சேறும், சகதியுமான ஒத்தையடி பாதையிலும் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று மயானத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்து வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து மயானத்திற்கு செல்ல சாலை வசதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:30 PM GMT
Mr.Mohan | அரூர்
#56380

சேதமடைந்த சிலையை சீரமைப்பார்களா?

மற்றவை

அரூர் அருகே நாச்சினாம்பட்டி கிராமத்தில் அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தற்போது பராமரிப்பின்றி உள்ளது. இந்த சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலையால் செய்யப்பட்ட கூண்டு துருப்பிடித்து சேதம் அடைந்தது. மேலும் சிலையின் கீழ் பகுதியில் உள்ள பீடமும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சிலையை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம், நாச்சினாம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:29 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#56379

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பர்கூர் பேரூராட்சி 11-வது வார்டு கே.எஸ்.ஜி. தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சிமெண்டு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்த சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்லவே வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் நடந்து செல்லவோ இயலாத நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் தாமதம் இன்றி தரமான சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:28 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56378

புதிய சாலை அமைக்கலாமே!

சாலை

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் விடப்பட்டன. இந்த நிலையில் அந்த சாலையில் பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஆனாலும் சாலையில் பல இடங்களில் மேடு, பள்ளமாகவும், கற்களும் கிடக்கின்றன. மேலும் கட்டுமான பணிக்காக பயன்படுத்திய மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களும் ஆங்காங்கே இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி அங்கு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -பழனி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 4:27 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#56377

சாலையோரம் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

பர்கூர் ஜெகதேவி சாலையில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் கால்வாய்களை வணிக வளாகத்தினர் அடைத்துள்ள காரணத்தினால் சாலையோரங்களில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்களின் செல்வோர் வேகமாக செல்லும் போதும் நடந்து செல்பவர்கள் மீதும் கழிவுநீர் படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தாமதம் இன்றி ஓம் சக்தி கோவில் வரை கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வேலுசாமி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:58 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#56249

உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து செலவடை செல்லும் வழியில் தோரமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் அந்த பகுதியில் எந்தவித வெளிச்சமும் இல்லாத காரணத்தால் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. மேலும் இரவு நேரத்தில் பஸ்சுக்காக நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும் வெளிச்சம் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் உயரமின் கோபுர மின்விளக்கு மற்றும் வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின்...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:55 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#56245

காட்சி பொருளான தெருவிளக்குகள்

மற்றவை

கருப்பூர் வெள்ளாளப்பட்டி சந்தைபேட்டை குடித்தெரு, ராஜவீதி ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த தெருவிளக்குகள் தற்போது சரிவர எரிவதில்லை காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் இங்கு நடமாட தயங்குகின்றனர். எனவே தெருவிளக்குகள் சரிவர எரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -சவுந்தர், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:54 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#56244

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

போக்குவரத்து

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட மோட்டுப்பட்டி பிரதான சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும் இதே பகுதியில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூசவும், புதிய மின்விளக்குகள் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசி, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:51 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#56240

இருசக்கர வாகனங்களால் இடையூறு

போக்குவரத்து

குமாரபாளையத்தில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே தற்காலிகமாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு அமைந்துள்ள வணிக வாளகம் முன்பு அதிக இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்களுக்கு இடையூறு ஏற்படுகின்றன. இதன் காரணமாக பயணிகளும், அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அருண், குமாரபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:50 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#56238

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோடு வழியாக நாமக்கல், திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிக்கு இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் வழியாகத்தான் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. நாமக்கல் ரோடு மிகவும் போக்குவரத்து உள்ள பகுதியாக விளங்குவதால் நாமக்கல் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் ரோட்டை கடக்க அச்சப்படுகின்றனர். எனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல நாமக்கல் ரோட்டில் இரண்டு இடங்களில் வேகத்தடைகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick