Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jan 2024 12:33 PM GMT
Mr. Raja
#43479

தொற்றுநோய் பரவும் அபாயம்

மற்றவை

நாகை ஆயுதப்படை மைதானம் போலீஸ் குடியிருப்பு அருகே பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 12:32 PM GMT
Mr. Raja
#43478

நாய்கள் பிடிக்கப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் ஆதலையூர் கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். சாலையில் குறுக்கே நாய்கள் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதலையூரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆதலையூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 11:51 AM GMT
Mr. Raja
#43450

வேகத்தடை வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகே ஆபத்தான சாலை வளைவு உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 11:48 AM GMT
Mr. Raja
#43446

பாலம் சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு ராஜீவ்புறத்தில் இடுகாடு அருகே பாலம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் தேங்கும் மழை நீர் வடிவதற்கு போதிய இட வசதி இல்லை. பாலத்தில் செடிகள் வளர்ந்து ஆபத்தான முறையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை சீரமைத்தும், மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 2:37 PM GMT
Mr. Raja
#41065

போக்குவரத்து சிக்னல் வேண்டும்

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்ட தலைநகராக இருந்தபோதிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது அதற்கு உரிய சாலையோ, போக்குவரத்தை சீரமைத்திட போக்குவரத்து சிக்னல் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது எனவே இதனை தடுத்திட உடனடியாக போக்குவரத்து சிக்னல் அமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 2:36 PM GMT
Mr. Raja
#41064

சாலைவசதி வேண்டும்

சாலை

திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாய் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 2:34 PM GMT
Mr. Raja
#41063

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 2:33 PM GMT
Mr. Raja
#41062

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் நகர் மற்றும் பஸ் நிலையம், ரெயில்நிலையம் போன்ற பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். . மேலும் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 2:32 PM GMT
Mr. Raja
#41061

ஆபத்தான பாலம் ?

ட்ரெண்டிங்

திருவாரூர் நகர் மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே சிறிய நடைபாலம் அமைந்துள்ளது இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது இந்த பாலம் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடியும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன்பு இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி வாகனங்கள் சென்று வரும் வகையில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:44 PM GMT
Mr. Raja
#41041

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகலில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன . இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . பொதுமக்கள் நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:43 PM GMT
Mr. Raja
#41040

தொற்றுநோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நாகை புதிய பஸ் நிலையம் அருகே காரைக்கால் செல்லும் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் அடிக்கடி பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதுஇதன்காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 1:42 PM GMT
Mr. Raja
#41038

வர்ணம் பூசப்படுமா?

சாலை

நாகை நகரில் உள்ள நாகை சாலை மற்றும் திருவாரூர்-நாகை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேகத்தடையில் வர்ணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொள்கின்றன. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நகரில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick