Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 March 2024 12:45 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#44874

நிழற்குடை வேண்டும்

போக்குவரத்து

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் நாகப்பட்டினம், அம்மாப்பேட்டை, நீடாமங்கலம் செல்லும் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைய உள்ளது. நிழற்குடை இல்லாததால் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுத்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சக்ரபாணி, தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 12:43 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#44872

குளம் தூர்வாரப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மதுக்கூர் செல்லும் சாலையில் ஒரு பழமை வாய்ந்த செட்டிகுளம் உள்ளது. அது தற்போது குப்பை கிடங்காக மாறி வருகிறது. மேலும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை தூர் வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,துவரங்குறிச்சி

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 12:41 PM GMT
Mr. Raja | பாபநாசம்
#44871

குரங்குகள் தொல்லை

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்படி கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை குரங்குகள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேகரன், தொண்டராயன் பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 12:39 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#44870

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் ஊராட்சியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வருவதில்லை.கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மைல் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பலர் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருநெல்லிக்காவல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 11:00 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#44298

போக்கு வரத்து நெரிசல் சரிசெய்யப்படுமா?

போக்குவரத்து

திருவாரூர் நகரில் புதிய மார்க்கெட்டில் பராமரிப்பு நடைபெற்று வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக நேதாஜி சாலை,ஆற்று பாலம் போன்ற இடங்களில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 10:58 AM GMT
Mr. Raja | சீர்காழி
#44297

வடிகால் வசதி வேண்டும்

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தின் நுழைவுவாயிலில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பிளாஸ்டிக் பொருட்களால் நிறைந்து அடைத்துக் கொண்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்கடையூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 11:02 AM GMT
Mr. Raja | சீர்காழி
#44296

அரசு பஸ்கள் பராமரிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை உள்ளது.இதில் நகரப் பஸ்கள் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்கள் அனைத்தும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக டயர்கள் மற்றும் பேருந்து உட்புறம் பலகைகள் ,மேற்கூரைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு பஸ்களை பராமரித்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 10:56 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#44295

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் அமைந்துள்ள திருநாங்கூர் பெருமாள் கோவில் குளம் அருகே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குப்பைகள் தேங்கி கிடப்பதை பார்த்து மன வேதனை அடைகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 10:55 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#44294

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம், வரதம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வள்ளுவர் காலனி பகுதியில் குடிநீர்தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் . குழாய்உடைந்து பலநாட்களாக குடி தண்ணீர் சாலையில் குளம் போல தேங்கிக்கிடக்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 1:44 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#43487

மின் விளக்கு எரியுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை-நாகை சாலையில் ராஜீவ் நகர் அருகே உள்ள தெரு விளக்குகள் இரவில் எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.மேலும் இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் எரிவதற்குஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 1:42 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#43486

நாய்கள் பிடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சையில் தொல்காப்பியர் சதுக்கம், ஆடக்காரதெரு, வண்டிக்கார தெரு போன்ற இடங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். சாலையில் குறுக்கே நாய்கள் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சையில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 1:40 PM GMT
Mr. Raja | திருவிடைமருதூர்
#43485

புதிய மின் கம்பம்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா 16 உக்கரை வட்டம் தத்துவாஞ்சேரி கீழத்தெருவில் ஒரு மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து, புதிய மின் கம்பம் அமைத்தனர். இதை அறிந்த அந்த பகுதிமக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்கள், திருவிடைமருதூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick