Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2024 12:32 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#48433

இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்கூடு சாலையில் நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு வேலிகள் (பேரிகார்டு) அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 12:30 PM GMT
Mr. Raja | பட்டுக்கோட்டை
#48432

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் உள்ள கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம் வாசலில் குடி நீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் கடந்த ஒரு சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெய்சங்கர்,பட்டுக்கோட்டை

மேலும்
ஆசிரியர் குறிப்பு
வீணாகும் குடிநீர் 
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2024 12:29 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#48431

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா, வெண்மணி ஒன்றியத்திற்குட்ட நானக்க குடி, காவலக்குடி, படுவை, மைலாங்குடி, ஆகிய கிராமங்களில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த நிலையில் போதுமான பஸ் வசதி இல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வேலைக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழ்வேளூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 2:43 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#46636

போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுமா?

போக்குவரத்து

பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலையாரிதெரு,பெரியதெரு,சின்னையாதெரு,பழனியப்பன் தெரு,வடசேரி முக்கம், கைகாட்டி பகுதி ஆகிய இடங்களில் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சில நேரங்களில் வழி கிடைப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 2:42 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#46635

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சாலை சீரமைக்கப்படுமா? திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியம் சேரி கண்டமங்கலம் கிராமத்தில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கண்டமங்கலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 2:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#46634

பஸ்கள் நின்று செல்லுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா உப்பூர் புது ரோடு பஸ் நிறுத்தத்தில் ஒரு சில அரசு பஸ்களை தவிர மற்ற பஸ்கள் நின்று செல்வதில்லை .இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். நாகை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் இங்கே நிற்பதில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல தக்க நடவடிக்கை வேண்டும் உப்பூர், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 2:40 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#46633

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் குமரன்குடி கீழத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பகுதியில் குடிநீர் சரியாக வருவதில்லை. தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதாகி உள்ள குடிநீர் குழாயை சீரமைத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழபுரம், ஜெய்கணேஷ்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 2:39 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#46632

தடை இல்லா மின்சாரம் வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடியில் தமிழ் நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது.இங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.இதனால் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்..எனவே சரியான பராமரிப்பு செய்து தடை இல்லாமல் மின் வினியோகம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 11:54 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#45572

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும் , பொதுமக்களும் இந்த குளத்தில் குளிக்கிறார்கள். இந்த நிலையில் இந்தக் குளத்தில் ஆகாயத்தாமரை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தோல் வியாதிகள் அரிப்பு உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பழையங்குடி.

மேலும்
ஆதரவு: 14
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 11:52 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#45571

வேகத்தடை அமைக்கப்படுமா.?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாறுவார்த்தலை பாலம் உள்ளது.இந்த பாலத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு தான் புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது.ஆனால் வேகத்தடை இல்லை.இதனால் குத்தாலத்திலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் மயிலாடுதுறை இருந்து வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இடத்தில் வேகத்தடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 11:51 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#45570

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி அபிஷேகக்கட்டளையில் வெறி நாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது. இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கன்றுக்குட்டி, கோழி என அனைத்தையும் கடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது. மேலும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருக்கடையூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 11:50 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#45569

மாற்று இடம் வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் அரிசி ஆலை உள்ளது.இங்கு வரும் நூற்றுக்கணக்கான லாரிகளை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் சாலையின் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாற்று இடத்தில் லாரிகளை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 12
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick