Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 March 2025 7:11 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54674

வாகனங்களை நிறுத்த அறிவிப்பு பலகை வைப்பார்களா?

மற்றவை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய வருபவர்கள் அமரும் இடத்தின் அருகில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக இருசக்கர வாகனங்களை அலுவலக முகப்பில் விட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். -தேவேந்திரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:10 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#54673

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

சாலை

அரக்கோணம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் செல்லும் திருத்தணி பிரதான சாலையில் ஜோதி நகர் பகுதியில் வளைவான இடத்தில் பல மாதங்களாக பள்ளம் இருக்கிறது. அந்தப் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் நடக்கிறது. பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜன்பாபு, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#54672

நாய் தொல்லை

மற்றவை

ஆற்காடு பகுதியில் பெரும்பாலான தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது அவர்களை துரத்தி செல்கின்றன. ஒரு சில இடங்களில் மாணவர்களை நாய் கடித்து விடுகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாக பிடித்து காட்டுப் பகுதிகளில் விட்டால் நன்றாக இருக்கும். -சுந்தரம், தன்னார்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#54671

தொலைக்காட்சி அறை சீரமைக்கப்படுமா?

மற்றவை

நாட்டறம்பள்ளி அருகே மல்லப்பள்ளி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட முத்தானபள்ளி கிராமம் பனந்தோப்பு பகுதியில் தொலைக்காட்சி பெட்டி அறை ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:04 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#54670

தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

மின்சாரம்

நாட்டறம்பள்ளி அருகே புதுப்பேட்டை ஊராட்சி முக்கனூரான் வட்டம் ஸ்ரீராம் நகர் பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. எனவே அங்கு தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விவேகானந்தன், புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 7:02 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#54669

சாலையின் குறுக்கே பள்ளம்

சாலையின் குறுக்கே பள்ளம்சாலை

ஜோலார்பேட்டை அருகே குள்ளகிழவன் வட்ட பகுதியில் சாலையின் குறுக்கே மழைநீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 6:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54668

கழிவுநீர் கால்வாைய தூர்வார ேவண்டும்

கழிவுநீர்

திருப்பத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் உள்ளது. கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்கி நிற்கிறது. கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -இளஞ்சேரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 6:57 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#54667

சுடுகாட்டில் இடவசதி இல்லை

மற்றவை

நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் அடுத்த நந்திபெண்டா பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதுமான இடவசதி இல்லை. எனவே இங்கு இட வசதியும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். -சுதாகர், வெலக்கல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 6:54 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#54666

பயன்படாத அடிபம்பு

பயன்படாத அடிபம்புதண்ணீர்

கண்ணமங்கலம் அருகில் உள்ள வண்ணாங்குளம் ஊராட்சியில் திருவண்ணாமலை சாலையோரம் ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அது, பல ஆண்டுகளாகப் பயன் படாமல் உள்ளது. அது, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பயன்படாத அடிபம்பை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -முருகன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 6:52 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#54665

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

திருவண்ணாமலை வேங்கிக்காலை அடுத்த தீபநகர் மேற்குப்பகுதியில் மெயின் ரோட்டை ஒட்டி 2 சாலைகளை இணைக்கும் வளைவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. அந்த மின் கம்பம் விரிசல் ஏற்பட்டு, அதில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -சண்முகம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 6:47 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#54664

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜவீதி தெருவில் பேரூராட்சி அலுவலகம், பள்ளிக்கூடங்கள், ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்தச் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. ராஜவீதி தெருவில் குண்டும், குழியுமான சாலையை சரி செய்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -திேனஷ், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 March 2025 6:44 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#54663

கிளை நூலகம் அமைக்கப்படுமா?

மற்றவை

ஜவ்வாதுமலையில் ஆட்டியானூர் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு படித்த இளைஞர்களும் உள்ளனர். மலைக் கிராம மக்கள் தினமும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும், மாணவ-மாணவிகள் தங்களை போட்டித் தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ளவும் கிளை நூலகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜி.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick