Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Jun 2025 7:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56618

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர் தாயப்பன் நகர் பகுதியில் உள்ள சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். -துரை, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56617

சாலையோரம் கோழிக்கழிவுகள் வீச்சு

சாலையோரம் கோழிக்கழிவுகள் வீச்சுகுப்பை

கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட காக்கங்கரையில் உள்ள ஏரியின் அருகே திருப்பத்தூர்-தர்மபுரி சாலையோரம் கோழிக்கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரம் வீசப்படும் கோழிக்கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெகன்நாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56616

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் ஈத்கா ரோடு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராமன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56615

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே ஆதியூரில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆனந்தன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:16 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56614

பாலம் பகுதியில் சாலை அமைப்பார்களா?

பாலம் பகுதியில் சாலை அமைப்பார்களா?சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள வாழியூர் கிராம காலனிக்குச் செல்லும் சாலையில் காளசமுத்திரம் ஏரிக்கால்வாய் குறுக்கே பாலம் கட்டி முடிக்கப்பட்டும் சாலையில் இருபக்கமும் இன்னும் தார் அல்லது சிமெண்டு சாலை அமைக்கவில்லை. மண் சாலையாக உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பல்வேறு வாகனங்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாலம் பகுதியில் தார் அல்லது சிமெண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்குவார்களா? -முருகேசன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:13 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#56613

தெரு விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம், மெயின் ரோடு, போளூர் ரோடு-ரவுண்டானா, ராஜவீதி, செந்தமிழ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்து, இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. தெரு மின் விளக்குகளை எரியவிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜவேல், செங்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#56612

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?போக்குவரத்து

கண்ணமங்கலம் பேரூராட்சி புதிய சாலையில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிறுத்தம் என 2 இடங்கள் உள்ளன. வேலூர்- திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பஸ்கள் இங்கு நின்று செல்கின்றன. பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றி விட்டனர். இடித்த இடத்திலேயே புதிய நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஏழுமலை, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:04 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#56609

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அது, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படாமல் பூட்டியே கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். -மைதீன்கான், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 7:02 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#56608

சாலையின் நடுவே மின் கம்பம்

சாலையின் நடுவே மின் கம்பம்மின்சாரம்

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தீப நகர் மேற்குப் பகுதியில் பிரதான சாலையின் நடுவே ஒரு மின் கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், பள்ளி வேன், பஸ், கனரக வாகனங்களுக்குச் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -பாஸ்கரன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 6:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56607

மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறுமற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் சாலையில் நேற்று மாலை மாடுகள் சுற்றித்திரிந்தன. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் நடந்து சென்ற பொதுமக்கள் அச்சத்தோடு அந்த வழியை கடந்து சென்றனர். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 6:44 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#56606

சேதம் அடைந்த தார் சாலை

சேதம் அடைந்த தார் சாலைசாலை

அணைக்கட்டு ஒன்றியம் பிராமணமங்கலம் ஊராட்சி அகரம், பிராமணமங்கலம் சாலையில் இருந்து ஈடியர்பாளையம் வழியாக தேவிசெட்டிகுப்பம், கட்டுபுடி இணைப்பு தார் சாலையை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வரூகின்றனர். அந்த வழித்தடத்தில் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்தத் தார் சாலை பல வருடங்களாகப் புதுப்பிக்கப்படாமல் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தார் சாலையைச் சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கந்தன், பிராமணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 6:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56605

தெருவில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம்

தெருவில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம்கழிவுநீர்

வேலூர் வசந்தபுரம் பர்மா காலனி 2-வது தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காகப் பள்ளம் தோண்டியபோது, அங்குச் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் உடைந்ததாகத் தெரிகிறது. இதனால், பல வாரங்களாகக் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாய் தெருவில் வழிந்தோடி வீடுகளின் முன்பு தேங்குகிறது. தெருவில் கழிவுநீர் தேங்குவதால் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூங்காவனம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick