குடிநீர் வினியோகம் செய்வார்களா?

Update: 2023-02-12 16:25 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுகிநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தரவில்லை. குடிநீரை வெளிமார்க்கெட்டில் விலை கொடுத்து வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் வாசுகி நகருக்கு குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வார்களா?

-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம். 

மேலும் செய்திகள்