சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைப்பார்களா?

Update: 2024-02-18 17:21 GMT

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவைக்காக பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் தண்ணீர் பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். பஸ் நிலையத்தில் பல இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. அந்த தொட்டியில் குழாய் இருக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் அந்தத் தொட்டிகளில் தண்ணீர் பிடித்து குடிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே பஸ் நிலையத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்குமா?

-ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்