குடிநீர் குழாய் சரி செய்து தண்ணீர் வழங்கப்படுமா?

Update: 2026-09-06 13:29 GMT

காட்பாடி செங்குட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. கிளித்தான்பட்டறை பகுதியில் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு உள்ளதால் எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளனர். அத்துடன் உள்ளூர் நீர் ஆதாரங்களான ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் நீரும் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் குழாய் பழுதை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி. விஷ்ணு, காட்பாடி. 

மேலும் செய்திகள்