குடிநீர் குழாய் சேதம்

Update: 2022-10-02 10:20 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கொத்தந்தவாடி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள குடிநீர் குழாயில் சேதம் அடைந்து வீணாக குடிநீர் வெளியேறுகிறது. அந்தக் குடிநீர் அருகில் உள்ள கழிவுநீருடன் கலக்கிறது. அந்தத் தண்ணீர் பூமிக்குள் இறங்கி மீண்டும் குடிநீராக எடுத்து பயன்படுத்தும் அவலம் உள்ளது. உடைந்த குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

-ஏ.வெங்கட்ராமன், கொத்தந்தவாடி.

மேலும் செய்திகள்