நீரேற்றும்போது வீணாக வழியும் தண்ணீர்

Update: 2023-08-20 16:43 GMT

தண்டராம்பட்டு தாலுகா காம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்தத் தொட்டிக்கு தினமும் நீரேற்றும்போது கவனக்குறைவாக விட்டு விடுவதால் தண்ணீர் வீணாக கீழே வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வீணாக வெளியேறும் தண்ணீரை தடுக்குமா?

-ஜெயமோகன், காம்பட்டு.

மேலும் செய்திகள்