வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2023-05-31 16:01 GMT

பேரணாம்பட்டு நகராட்சி அருகில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து 5 மாதமாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அந்தக் குடிநீர் சாலையோரம் வழிந்து கொண்டிருப்பதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலர் தகவல் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வார்களா?

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்