ஏரி வற்றுவதால் தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2026-05-31 13:16 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பேரிகை சாலையில் பழமையான துரை ஏரி உள்ளது. சூளகிரியில் உள்ள மில்லத் நகர், வி.ஜ.பி. நகர், காமராஜ் நகர், பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகள் துரை ஏரியை நம்பி உள்ளன. தற்போது இந்த ஏரியில் தண்ணீர் குறைந்து வருவதால் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக தண்ணீர் விடாததால் ஏரி வற்றிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக துரை ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்