குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2026-05-31 10:45 GMT

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆதனக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ராட்சத குழாய் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள சோழகம்பட்டி கிராமத்தின் அருகே இந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால், அந்த இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கிநிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்