கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. மின்கம்பத்தில் இருந்து ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன்மூலம் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மர்மநபர்கள் மின்கம்பத்தில் இருந்து மின்சாரப்பெட்டிக்கு செல்லும் வயரை வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டதால், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே புதிய மின்வயர்களை பொருத்தி, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.