புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாப்பா வயலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைக்கப்பட்டது. இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த எந்திரம் பழுதடைந்து நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.