ஆகாயத்தாமரைகள் சூழ்ந்த சந்திராம்பிகை ஏரி

Update: 2026-05-03 13:14 GMT

ஓசூரில் பெங்களூரு சாலையில், தர்கா அருகே பழமையான சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீண்ட காலமாகவே ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஏரி நீரே கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஏரியை ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏரி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றி ஏரியை சிறந்த முறையில் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்