குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-02-15 12:18 GMT

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள திண்டமங்கலம் பஞ்சாயத்து புது காலனியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 8 மாதங்களாக அப்பகுதியில் குடிநீர் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எப்போது இதற்கு தீர்வு கிடைக்குமோ? என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்