பொதுமக்கள் அவதி

Update: 2026-02-15 11:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத்தொண்டைமான்ஊரணி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சரிவர குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. காலை அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் நிலையில், மாலை நேரங்களில் குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் உள்பட பிற தேவைகளுக்கும் போதிய தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் முறையான குடிநீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்