திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 3-வது தெருவில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த தொட்டியின் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் உடைப்பின் வழியாக வெளியேறும் குடிநீர் அருகே உள்ள தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.