விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்டு காரைகள் பெயா்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிப்புகளும் காணப்படுகின்றன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.