குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2025-06-29 17:47 GMT
பண்ருட்டி அருகே ஒறையூரில் இருந்து பலாப்பட்டு செல்லும் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் உடைந்த குழாய் வழியாக கழிவுநீர் கலப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்