திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கருவேப்பிலைபாளையம் ஊராட்சியில் ஒருசில பகுதிகளில் மட்டும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற இடங்களுக்கு குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.