வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடியில் உள்ள பழைய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.