குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-06-22 13:05 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் ஓலைப்பாடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக போதிய அளவு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் முறையான சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் செய்திகள்