பயனற்ற தண்ணீர் தொட்டி

Update: 2025-06-22 11:36 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோபனாபுரம் ஊராட்சியில் ஓசரப்பள்ளி கிராமத்தில் உள்ள இடுகாட்டுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் வருவதற்கான எந்த ஏற்பாடும் செய்து தரப்படவில்லை. இதனால் இந்த தண்ணீர் தொட்டி பயன்பாடு இன்றி வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்