வீணாகும் குடிநீர்

Update: 2025-06-22 10:58 GMT

பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி செல்கிறது. இது அருகில் உள்ள வடிகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீருடன் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்