புகார்பெட்டி செய்தி எதிரொலி; குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்பட்டது

Update: 2025-06-22 10:57 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பெரியார் நகர் 4-வது தெருவில் மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அங்கு கடந்த சில குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.பெண்கள், முதியவர்கள் குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடனடியாக அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்த்து வைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் "தினத்தந்தி" நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்