சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் ரெயில்வே ஜங்ஷன் அருகில் உழவர் சந்தை உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள குடிநீர் குழாயில் ஏராளமான பொதுமக்கள் குடிநீர் பிடித்து செல்கின்றனர். இந்நிலையில் அந்த இடத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சிமெண்டு கான்கிரீட் தளம் அமைத்து சுகாதாரமாக குடிநீர் பிடித்து பொதுமக்கள் உபயோகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிகுமார், தாரமங்கலம்.