குளம் தூர்வாரப்படுமா?

Update: 2025-06-15 15:13 GMT
குறிஞ்சிப்பாடி அடுத்த அம்பலவாணன் பேட்டையில் குள்ளஞ்சாவடி- கோ.சத்திரம் சாலையோரத்தில் உள்ள குள்ளன் குளம் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் குளத்தில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்