பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகைகள் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மரம், செடி -கொடிகள் உள்ளிட்டவை வளர்ந்து வருவதால் இந்த நீர்த்தேக்க தொட்டி விரைவில் சேதம் அடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது முளைத்துள்ள செடி- கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.