உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 15-வது வார்டு அம்பேத்கர் காலனியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.