பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-05-18 09:39 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பழங்கனாங்குடி ஊராட்சி பூலாங்குடி காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்