திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, வரதராஜபுரத்தில் ராஜீவ் காந்தி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ஸ்டாலின் தெரு, அம்பேத்கர் தெரு ஆகிய தெருக்கள் உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிதண்ணீர் வருவதில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த பகுதியில் குடிதண்ணீர் கிடைக்க வரதராஜபுரம் ஊராட்சி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.