கலங்கலான குடிநீர் விநியோகம்

Update: 2025-04-06 12:17 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கே பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்கள் இந்த குடிநீர் கலங்கலாக வருவதினால், இப்பகுதி மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்த அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்