சூலூர் அருகே கலங்கல் ஊராட்சி தென்றல் நகரில் 165 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் எந்த வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு கிடையாது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.