கம்பம் சின்ன வாய்க்காலின் கரைப்பகுதி பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. மேலும் கரைப்பகுதி பலமிழந்து வருவதால் வாய்க்காலில் தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கரைப்பகுதியை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.