நீர்வழித்தடம் மீட்கப்படுமா?

Update: 2024-09-15 08:04 GMT

சூலூர் தாலுகா நடுப்பாளையம் அருகே வெங்கடேஸ்வரா நகரில் மழைநீர் செல்லும் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் ஓட்டம் தடைபட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதத்தை விளைவிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீர்வழித்தடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்.

மஞ்சு, நடுப்பாளையம்.

மேலும் செய்திகள்