தார்ப்பாயால் மூடப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-05-12 15:45 GMT

திருச்சி மாவட்டம், அன்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் ஊரின் மையப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் மேற்பகுதி சிதிலமடைந்து இடிந்து தொட்டிக்குள் விழுந்தது. இந்த நிலையில் தற்போது மேல்நிலை நீர்த்தக்க தொட்டியின் மேற் பகுதி தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. தற்போது அடிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் இந்த தார்ப்பாய் பழுதடைந்து தண்ணீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்